May 17, 2011

நண்பா...


சின்ன சின்ன,நினைவுகள் இன்பங்கள்,துக்கங்கள்,எதிர்பார்ப்புகள் 
என் நாயகன் நினைவுகள்,
வெறும் கனவுகள் 
இவை எல்லாம் எங்கெங்கோ,எப்பொழுதோ நடந்தாலும்; 
உன் கண் அசைவினாலும், உன் நினைவாலும்  
ஒரே நேரத்தில் நடக்கின்றன. 
காலம் என்னும் கவிதை புத்தகத்தில்  
வாழ்க்கையின் வர்ணனை பகுதியின் முதல் வார்த்தை நட்பு 
உருவத்தில் மயங்கி பருவ வாசலில் 
 புன்னகை நீர் தெளித்து போட்ட முதற் கோலம் நட்பு 
நிலவை நீர் உற்றி வளர்ப்பதும் இல்லை 
 சூரியனை தீ மூட்டி எரிப்பதும் இல்லை 
இயற்கையின் படைப்புகள் அவை 
 அதனிலும் இன்னும் ஒன்று நம் நட்பு...